Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அய்யலூரில் கோயில் திருவிழா; ... ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் தேவையின்றி நிரப்பப்படும் தண்ணீர்
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் தெப்பக்குளத்தில் தேவையின்றி நிரப்பப்படும் தண்ணீர்

பதிவு செய்த நாள்

29 மே
2023
04:05

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா நடைபெறும் தெப்பக்குளத்தில் தேவையின்றி தண்ணீர் நிரப்பப்படுவதால் தண்ணீர் வீணாவதுடன் கோயில் நிர்வாகத்திற்கு மின் கட்டணமும் அதிகரிக்கிறது.

ஜிஎஸ்டி ரோடு பகுதியிலுள்ள தெப்பக்குளத்தில் தை மாதம் மிதவைத் தெப்பம் அமைக்கப்பட்டு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி தெப்பத் திருவிழா நடைபெறும். திருப்பரங்குன்றம் கண்மாய்களுக்கு வைகை அணை தண்ணீர் செல்லும் நிலையூர் கால்வாயில் இருந்து செட்டிகுளம் வழியாக தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டு வந்தது. அந்த வழிகள் அடைபட்டு விட்டதால் பல ஆண்டுகளுக்கு முன்பு தெப்பக்குளம் அருகே சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன் பின்பு தெப்பத் திருவிழா நடைபெறும் சமயத்தில் ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு தெப்பத் திருவிழா நடைபெற்று வருகிறது. தற்போது இரண்டு நாட்களாக ஆழ்குழாயிலிருந்து தெப்பக்குளத்திற்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஏற்கனவே தெப்பக்குளத்திலுள்ள தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் கிடைக்கிறது. அத்துடன் தற்போது செல்லும் தண்ணீரும் வீணாகிறது. தவிர கோயில் நிர்வாகத்திற்கு தேவையின்றி கூடுதல் மின் கட்டணம் செலவும் ஏற்படுகிறது. பக்தர்கள் காணிக்கை பணம் வீணாகிறது‌. எதற்காக யார் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்புகின்றனர் என்பது தெரியவில்லை. கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar