Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா ... ஸ்ரீரங்கம் கோயிலின் புதிய இணை கமிஷனர் பொறுப்பேற்பு ஸ்ரீரங்கம் கோயிலின் புதிய இணை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
மானாமதுரை அருகே ஆயிரம் ஆண்டு பழமையான பாண்டியர் கால விநாயகர் சிற்பம் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

05 ஜூன்
2023
06:06

மானாமதுரை: மானாமதுரை அருகே எம் கரிசல்குளத்தில் பாண்டியர் கால விநாயகர் சிற்பம் மற்றும் நாயக்கர் சிலைகளை வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தாலுகா எம்.கரிசல்குளம் கிராமத்தில் உள்ள விநாயகர் ஆலயத்தில் தென்னக வரலாற்று மையத்தைச் சேர்ந்த வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் தங்கமுத்து,பாலசுப்பிரமணியன் ஆகியோர் அங்கு சென்று கள ஆய்வு செய்த போது அந்த சிற்பம் 1000 ஆண்டுகள் பழமையான பாண்டியர் காலத்தைச் சேர்ந்த விநாயகர் சிற்பம் என்று கூறினர். இது குறித்து அவர்கள் மேலும் கூறுகையில்,இந்த சிற்பம் 3 அடி உயரமும் ஒன்றரை அடி அகலமும் கொண்ட பலகைக்கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. விநாயகர் லளிதாசனக் கோலத்தில் பீடத்தின் மீது அமர்ந்துத்துள்ளார். தலையில் கரண்ட மகுடம் தரித்தும் அகன்ற 2 காதுகளுடன் அழகாக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பமானது 4 கரங்களுடன் வடிக்கப்பட்டுள்ளது.பின் வலது கரத்தில் மழுவும், பின் இடது கரத்தில் பாசக்கயிரும், முன் வலது கரத்தில் முறிந்த தந்தமும், முன் இடது கரத்தில் மோதகமும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் தும்பிக்கை மோதகத்தை எடுப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ளது. பாண்டியர்களுக்கே உரித்தான கலை நயத்தில் இந்த சிற்பம் சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விநாயகர் கோவில் முன் மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது. முன் மண்டபத்தூணில் இரண்டு ஆண் சிலை ஆடை ஆபரணங்களுடன் எதிரெதிரே இரு கை கூப்பி வணங்கியபடி உள்ளது அதில் ஒருவர் திருமலை நாயக்க மன்னராக இருக்கலாம். மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவர் திருமலை நாயக்கர் இவர் கி.பி 1623 தொடக்கம் 1659 வரையான காலப்பகுதியில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தார். இவர் ஆட்சி செய்த காலத்தில் தான் எந்த ஒரு கோவில் பணி செய்தாலும் அங்கு தனது உருவச்சிலையை இரு கை கூப்பி அந்த தெய்வத்தை வணங்கியபடி வைப்பது வழக்கம். இங்கும் அதுபோல் வணங்கியபடியே உள்ளது.இந்த கோவிலின் முன் மண்டபம் அவரால் கட்டப்பட்டு இருக்கலாம் மற்றொருவர் அவரது பிரதானியாக இருக்கலாம் என்றும் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar