Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பட்டத்தரசி அம்மன் கோவில் பூச்சாட்டு ... வில்லிவாக்கம் பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லை ஸ்தலசயனர் கோவிலில் திருப்பணிகள் மீண்டும் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2023
05:06

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்தலசயன பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்கள் உள்ளிட்டோர் அருள்பாலிக்கின்றனர். கடந்த 1998ல், இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டிய கும்பாபிஷேகம் நடத்தப்படாதது குறித்து, நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் முடிவெடுத்தது. அதன்பின், 2021 இறுதியில் பாலாலயம் நடத்தி, திருப்பணிகள் துவக்கப்பட்டன. உயர் நீதிமன்ற வல்லுனர் குழு வழிகாட்டுதலின்படி, சுவாமியர் சன்னிதிகள், மஹா மண்டபம் உள்ளிட்டவை, பழமை மாறாமல் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்கிடையே, பூதத்தாழ்வாருக்கு உற்சவம் நடத்தக் கோரி, ஆறு மாதங்களுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். கோவில் நிர்வாகம், கடந்த மே 4ம் தேதி, கும்பாபிஷேகம் நடத்தப்படும் என, அந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவித்தது. திருப்பணிகள் முழுமையாக முடிக்கப்படாததால், கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதமானது. கடந்த ஒன்றரை மாதங்களாக, திருப்பணிகள் எதுவும் நடத்தப்படவில்லை. இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் விளைவாக, தற்போது மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது. நரசிம்மர், பூதத்தாழ்வார், ராமர், பன்னிரு ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் சன்னிதிகள் போன்றவற்றை மாற்றியமைக்கும் பணிகளும், மஹா மண்டப மேற்பகுதியில் சீரமைப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று ஆடிக்கிருத்திகை விழா துவங்கியது. திருத்தணி முருகன் ... மேலும்
 
temple news
கோவை, சாய்பாபா காலனி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாதம் கடைசி வெள்ளி கிழமையை முன்னிட்டு மூலவர் ... மேலும்
 
temple news
நாகர்கோவில்; சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகர்கோவில், கிருஷ்ணன்கோவில் அன்னை ஆதிபராசக்திக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar