Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் ஆடிப்பூர ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி ஏகாதசி சிறப்பு வழிபாடு காரமடை அரங்கநாதர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இந்தாண்டு 2 ஆடி அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்களுக்கு முன்னேற்பாடு பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
இந்தாண்டு 2 ஆடி அமாவாசை ; சதுரகிரியில் பக்தர்களுக்கு முன்னேற்பாடு பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2023
01:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி அமாவாசை வழிபாடு ஆகஸ்ட் 16ல் நடக்கிறது. இதற்கான ஆரம்பக்கட்ட முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் துவக்கிவுள்ளது.

இந்த தமிழ் வருடத்தில் ஆடி 1 மற்றும் ஆடி 31என இரண்டு அமாவாசை நாட்கள் வருகிறது. இதில் ஆடி 31, ஆகஸ்ட் 16 அன்று ஆடி அமாவாசை திருவிழாவினை சிறப்பாக நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனை முன்னிட்டு ஆகஸ்ட் 13 அன்று பிரதோஷம், ஆகஸ்ட் 14 சிவராத்திரி வழிபாடு, ஆகஸ்ட் 16 ஆடி அமாவாசை வழிபாடு நடக்கிறது. இதற்காக ஆகஸ்ட் 13 முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். வழக்கமாக நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் ஆடி அமாவாசை வழிபாட்டிற்காக கூடுதல் நாட்கள் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தற்போது சதுரகிரி மலைப்பகுதியில் போதிய மழை இல்லாததால் வனப்பகுதி காய்ந்தும், ஓடைகளில் போதிய நீர்வரத்து இல்லாமலும் உள்ளது. இருந்த போதிலும் ஆடி அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு சுமார். ஒரு லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களுக்கு தேவையான குடிநீர், உணவு உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான ஆரம்பகட்ட முன்னேற்பாடு பணிகளை அறங்காவலர் ராஜா பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் கோயில் ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆடி ஒன்றாம் தேதி வரும் அமாவாசையை முன்னிட்டு, ஜூலை 15 பிரதோஷ நாள் முதல் ஜூலை 18 வரை நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கையில் உள்ள வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமி பூஜை நடந்தது. மூலவர் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஐந்தாம் நாளான இன்று  நம்பெருமாள் சிவப்பு நிற ... மேலும்
 
temple news
கோவை: ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம் 75-வது ஆண்டு பூஜா மகோத்சவம் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை 24ம் தேதி ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை, மருதமலை அடிவாரத்தில், 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை, ‘அமிக்கஸ் கியூரி’ எனும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி திருப்பரங்குன்றம் பகுதிகளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar