Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மாத பிறப்பு; பழநி மலைக்கோயிலில் ... தாயே கருமாரி.. இன்று ஆடிச்செவ்வாய்.. அம்மன், முருகனை வழிபட நல்லதே நடக்கும் தாயே கருமாரி.. இன்று ஆடிச்செவ்வாய்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் காட்டுத்தீ; கோயிலில் பக்தர்கள் தங்க வைப்பு
எழுத்தின் அளவு:
சதுரகிரி மலையில் காட்டுத்தீ; கோயிலில் பக்தர்கள் தங்க வைப்பு

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2023
10:07

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி மலையில் இன்று இரவு ஏற்பட்ட காட்டு தீயினால், பக்தர்கள் மலையிலிருந்து கீழ் இறங்குவது நிறுத்தி வைத்து கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத முதல் அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறிய நிலையில் மாலை 6 மணி வரை பெரும்பாலான பக்தர்கள் கீழே இறங்கி விட்டனர். இந்நிலையில் சாப்டூர் வனப்பகுதி பீட் நம்பர் 5 என்ற இடத்தில், பிலாவடி கருப்பசாமி கோயிலுக்கு மேற்கு, தவசி பாறைக்கு கிழக்கு பகுதியில் இன்று இரவு 7:00 மணிக்கு காட்டு தீ பற்றி எரிந்தது. இதனை தாணிப்பாறை மலை அடிவாரத்தில் இருந்த பக்தர்கள் பார்க்க முடிந்தது. இதனையடுத்து மலையில் இருந்து பக்தர்கள் கீழே இறங்குவது நிறுத்தி வைக்கப்பட்டு கோயிலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகர்கள் செல்வமணி மற்றும் பிரபாகரன் தலைமையில் வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக சதுரகிரி வனப்பகுதியில் போதிய மழை இன்றியும், ஓடைகளில் நீர்வரத்து இல்லாத நிலையிலும், வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்பட்டது. இன்று மாலை மலைப் பகுதியில் பலத்த காற்று வீசியதால் மூங்கில்கள் உரசி தீப்பிடித்து, காய்ந்து கிடக்கும் செடி, கொடிகளில் பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar