Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜபெருமாள் ... பழநியில் பக்தர்கள் பறவை காவடி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா; பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி விழா; பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஆக
2023
04:08

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரமத்தில் முளைப்பாரி திருவிழாவில் 150 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முளைபாரி ஏந்தி வந்து பொங்கல் வைத்து வழிபட்டனர். உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா ஆசிரம வளாகத்தில் முளைப்பாரி திருவிழா நடந்தது. இதனையொட்டி பெண்கள் தங்களது வீடுகளில் முளைப்பாரிகளை வைத்து வழிபட்டு ஸ்ரீ சாரதா ஆசிரமத்திற்கு கொண்டு வந்தனர். ஸ்ரீ சாரதா ஆசிரமத்தில் ஸ்ரீ சாரதாம்பாள், ராமகிருஷ்ணர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு முளைப்பாரி வைத்து வழிபாடு நடந்தது. அப்போது ஸ்ரீ சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்த பிரேம ப்ரியா அம்பா தலைமையில் ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் பள்ளித் தாளாளர் யத்தீஸ்வரி ஆத்மா விகாச ப்ரியம்பா சிறப்பு பூஜைகள் செய்து தீபாரதனை செய்தனர். இந்த முளைப்பாரி திருவிழாவில் பள்ளியந்தாங்கல், அஜிஸ் நகர், பில்லூர், மலையனூர், பு.கொணலவாடி, ஆர்.ஆர்.குப்பம்., மூலசமுத்திரம், வெள்ளையூர், உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஆசிரமத்தில் பொங்கல் வைத்து வழப்பட்டனர்.

இத்திருவிழாவில் ஆசிரம சகோதரிகள், பெண்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முளைப்பாரி விழாவையொட்டி ஆசிரமத்தின் விவேகானந்தா சேவா பிரதிஷ்டான் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு செயல் விளக்க கண்காட்சி வைத்திருந்தனர். அவற்றில் காடுகள் நாட்டின் கண்கள், விளைநிலமும் தெய்வமும், சிறுதானிய உணவில் சீரான ஆரோக்கியம்,, கோமாதாவே எங்கள் குலமாதா, பண்பாட்டை பாதுகாப்போம், ஆன்மீகத்தில் அறிவியல் காண்போம், மஞ்சள் பை மாறுவோம், மாற்றம் இன்றே துவக்குவோம், அஞ்சறை பெட்டிக்குள் ஒரு அருமருந்து கடை, தண்ணீர் சிக்கனம் தேவை எக்கணமும், பாரத பெருமை உணர்த்திடுவோம், பாரம்பரியம் மீட்டு எடுப்போம் போன்ற கருத்துக்கள் அடங்கிய விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். அவற்றின் அவசியம் குறித்து பெண்கள் விளக்கி கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், நிலமங்கை தாயாருக்கு, புரட்டாசி வெள்ளி உற்சவம் ... மேலும்
 
temple news
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற ஸ்ரீ கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தம ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உள்ள நவாம்ச சஞ்சீவி ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
பழநி; பழநி பகுதியில் புரட்டாசி மாத சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar