கமுதி வீர ஆஞ்சநேயர் கோயிலில் அரசமரம் ,வேப்ப மரத்திற்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2023 07:08
கமுதி: கமுதியில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு அங்குள்ள அரசமரம் வேப்பமரத்திற்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது .உலக நன்மைக்காகவும், மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும் திருக்கல்யாணம் நடந்தது. இதில் அரசமரம் சிவனாகவும், வேப்பமரம் பார்வதி தேவியாகவும் பாவித்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை, மற்றும் வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாணம் நடந்தது.பின்பு அன்னதானம் வழங்கப்பட்டது.கமுதி அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.