பழநி சண்முக நதிக்கு ஆராட்டு; அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04ஆக 2023 08:08
பழநி: பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு நதிக்கு சிறப்பு ஆராட்டு விழா நடைபெற்றது.
பழநி சண்முக நதியில் ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு மெய்தவ அடிகள் தலைமையில் சிறப்பு ஆராட்டு விழா நடைபெற்றது. மாலை நேரத்தில் சண்முக நதியில் மலர்கள் தூவி வழிபாடு நடந்தது. மேளங்கள் முழங்க சண்முக நதிக்கு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் நடந்தது. மாதம்தோறும் கார்த்திகை திருநாளில் சண்முக நதிக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் சுவாமி கருடானந்தா ஈஸ்வர பட்டா சுவாமிகள் யோகா சிவக்குமார் யோகா முருகன் சித்த மருத்துவர் கண்ணப்பன் ஆலய பாதுகாப்பு இயக்க சுவாமிநாதன் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.