Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடிச்செவ்வாய்; அன்ன வாகனத்தில் ஏழை ... ஆகாச முத்து காளியம்மன் கோயில் விழா துவக்கம் ஆகாச முத்து காளியம்மன் கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா; குவிந்த பக்தர்கள்.. பால், பன்னீர் காவடிகளுடன் பரவசம்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழா; குவிந்த பக்தர்கள்.. பால், பன்னீர் காவடிகளுடன் பரவசம்

பதிவு செய்த நாள்

08 ஆக
2023
02:08

திருத்தணி முருகன் கோவிலில் ஆடிப்பரணி விழாவில் பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். பால் குடம், காவடிகள் எடுத்து வழிபட்டனர். ஆறு மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.

ஆடிப்பரணி என்பதால், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் திருத்தணிக்கு வந்தனர். பின், மலையடிவாரத்தில் உள்ள சரவணபொய்கை மற்றும் மேல்திருத்தணியில் உள்ள நல்லாங்குளம் ஆகிய இடங்களில், பக்தர்கள் புனித நீராடி, மலர், மயில், பால் மற்றும் பன்னீர் காவடிகளுடன், மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசித்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மொட்டை அடித்தும் காவடிகள் எடுத்தும், முருகப்பெருமானை தரிசித்தனர். நேற்று இரவு முதல், இன்று வரை, 60 ஆயிரம் பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து தரிசித்தனர். மலைக்கோவிலில் அதிகளவில் பக்தர்கள் குவிந்ததால், பொது வழியில், பக்தர்கள் ஆறு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர். சில பக்தர்கள் காவடிகளுடன் பம்பை, உடுக்கை மற்றும் சிலம்பாட்டத்துடன் வந்து வழிபட்டனர். விழாவை ஒட்டி, அதிகாலை 5:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.காவடி மண்டபத்தில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; கங்கைகொண்ட சோழபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அன்னாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த  அன்னாபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவாரூர்: திருவாரூர் விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே சமயபுரம்  பகுதியில் வைத்தியபுரி ஸ்ரீ மகா சித்தர் பீடத்தில் ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்: கார்த்திகை பூர்ணிமாவை முன்னிட்டு, வாரணாசியில் கங்கை நதியில் புனித நீராட ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar