Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ணாரி மாரியம்மன் கோவிலில் உற்சவ ... அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிக்கிருத்திகை; பக்தர்கள் காவடி நேர்த்தி்க்கடன் அருணாசலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை: வடபழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. வீதி எங்கும் அரோகரா கோஷம்
எழுத்தின் அளவு:
ஆடி கிருத்திகை: வடபழநி முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்.. வீதி எங்கும் அரோகரா கோஷம்

பதிவு செய்த நாள்

09 ஆக
2023
11:08

சென்னை: வடபழநி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

சென்னை, வடபழநி முருகன் கோவில், பழநிக்கு நிகராக போற்றப்படுகிறது. இக்கோவில், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது. கந்தனைக் கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால், கிருத்திகை  தினமே கார்த்திகேயனுக்கு உரியதாகி விட்டது. ஆடிக்கிருத்திகை நாளில் முருக பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும்,  பாலபிஷேகம் முதலியன செய்தும் ஆறுமுகனை ஆராதிப்பார்கள். இதில் முக்கிய தலங்களில் ஒன்றாக விளங்குகிறது வடபழநி முருகன் கோவில். ஆடி கிருத்திகையில் ஒவ்வொரு ஆண்டும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேகங்கள், அலங்காரம் நடைபெற்றது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் மற்றும் புதுச்சேரி உட்பட, அண்டை மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் வந்தனர். அலகுகுத்தியும், காவடி எடுத்தும், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். நீ்ண்ட வரிசையில் காத்திருந்து கந்தனை வழிபட்டு செல்கின்றனர். வடபழநி கோவில் வீதி எங்கும் பக்தர்களின் அரோகரா கோஷம் வின்னை முட்ட ஒலிக்கிறது.

சிறப்பு ஏற்பாடு; பக்தர்கள் நெரிசல் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்களின் நலனை கருத்தில் வைத்து, காவல் துறை கண்காணிப்பு, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நேர்த்திக்கடனாக அலகுகுத்தி வரும் பக்தர்கள், மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. பக்தர்களுக்கான ‘கார் பார்க்கிங்’ வசதியும் செய்யப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாதிரை நடராஜரை வழிபட சிறந்த நாள் ஆகும். நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் தருமபுர ஆதீனம் 27வது சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் கூத்தியார்குண்டு கிராமம் சுந்தரவள்ளி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar