Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளி கவசம், மலர் அலங்காரத்தில் ... ஆடி சனி, ஏகாதசி; கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் குவிந்த பக்தர்கள் ஆடி சனி, ஏகாதசி; கொடிசியா திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா
எழுத்தின் அளவு:
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளி திருவிழா

பதிவு செய்த நாள்

12 ஆக
2023
01:08

சாத்துார்: விருதுநகர் மாவட்டம் சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி மாதம் கடைசி வெள்ளி திருவிழாவை முன்னிட்டு நடந்த அம்மன் வீதியுலா நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை, ஆடி மாதங்களில் திருவிழா நடைபெறும். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழாவிற்காக ஆக.,4ல் கொடியேற்றம் நடந்தது. தினமும் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் பாத யாத்திரையாக கோயிலுக்கு வந்து பொங்கலிட்டும், முடி காணிக்கை செலுத்தியும், மாவிளக்கு, அக்னி சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று ஆடி கடைசி வெள்ளி என்பதால் ஏராளமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர். இருக்கன்குடி உற்ஸவ மாரியம்மன் சன்னதியில் இருந்து மதியம் 3:40 மணிக்கு ரிஷப வாகனத்தில் அம்மன் இருக்கன்குடியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயில் மேட்டை அடைந்தார். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என கோஷமிட்டு வணங்கினர். கோயிலின் வசந்த மண்டபத்தில் அம்மன் ரிஷப வாகனத்தில் வீற்றிருந்து நாளை அதிகாலை 5:00 மணிக்கு அங்கிருந்து கிளம்பி உற்ஸவரின் சன்னதியை அடைவார்.
ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூஜாரி, ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் (பொ) வளர்மதி, அலுவலர்கள் செய்திருந்தனர். டி.எஸ்.பி., வினோஜி தலைமையில் நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar