Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆவணி வெள்ளி அம்மன் கோயிலில் சிறப்பு ... சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் விளக்கு பூஜை சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆவணி மாத பிறப்பு முதல் பார்வைக்காக கோயில் நடை திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஆக
2023
05:08

சாயல்குடி; சாயல்குடி அருகே எஸ்.தரைக்குடியில் உமையநாயகி அம்மன் கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்றதாகும். இங்குள்ள மூலவர் உமையநாயகி அம்மன் கூரையின்றி வெயிலிலும் மழையிலும் திருமேனி படும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இங்கு கடந்த ஜூலை 16 அன்று ஆடி மாத பிறப்பை முன்னிட்டு முதல் நாள் ஆனி 31 அன்று மாலை 7:00 மணியளவில் கோயில் நடை அடைக்கப்பட்டது. ஆடி மாதம் முழுவதும் நிறைவடைந்த பின்னர் நேற்று ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு முதல் பார்வை நிகழ்ச்சிக்காக அதிகாலை 4:00 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பொதுவாக ஆடி மாதம் என்றால் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. அந்த மாதத்தில் முளைக்கொட்டு உற்ஸவம், சிறப்பு தரிசனம், கூழ் காய்ச்சி ஊற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடக்கும். ஆனால் இங்குள்ள அம்மனுக்கு மட்டும் ஆடி மாதம் முழுவதும் கோயில் நடை அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அச்சமயத்தில் யாரும் பக்தர்கள் கோயிலுக்கு செல்வதில்லை. கோயில் நிர்வாகிகள் கூறியதாவது; ஆடி மாதத்தில் உமையநாயகி அம்மன் இங்கிருந்து ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் புனித நீராடுவதற்காக செல்வதாக ஐதீகம் (சம்பிரதாயம்) உள்ளது அதுவரை கோயில் கதவு பூட்டப்பட்டிருக்கும் கருவறை வாசல் படி முன்பு பச்சரிசி தவிடு பரப்பப்பட்டு வெளியே சென்று திரும்பிய அம்மனின் திருவடி பாதச்சுவடு தென்பட்டுள்ளதாக புராண வரலாறு கூறப்படுகிறது. ஆவணி முதல் பார்வை தரிசனத்திற்காக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்து திரும்புகின்றனர் என்றனர். கோயிலில் யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை உள்ளிட்டவைகளுக்கு பின்பு ஏராளமானார் கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு, நேர்த்திக்கடன் பூஜைகளை செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா முடிந்து, உண்ணாமுலை ... மேலும்
 
temple news
சென்னை; சென்னை மயிலாப்பூரில் உள்ள வேதாந்த தேசிகர் மண்டபத்தில் நாட்டு நலனுக்காக ‘ஸ்ரீ வித்ய கோடி ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; முருகனின் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம், பழநி திருஆவினன்குடி கோயில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 8ம் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தையொட்டி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar