Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோக மைய ரதத்திற்கு மன்னீஸ்வரர் ... கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துளசி அலங்காரத்தில் லட்சுமி ஹயக்ரீவர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் துளசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில் தங்கி இடைப்பாடி பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
10:02

பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ராஜகுல காவடி குழுவினர் இரவில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.


பழநி தைப்பூச திருவிழா பிப்.,4,ல் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து சேலம் மாவட்டம் இடைப்பாடியை சேர்ந்த பர்வத ராஜகுல பக்தர்கள், காங்கேயம், தாராபுரம் வழியாக மானுரை வந்தடைந்தனர். மானூர் சண்முக நதி அருகே பூஜைகள் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். நேற்று காவடிகளை மானூர் சண்முக நதிக்கு கொண்டு வந்தனர். அங்கு பூஜைகள் நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தனர். மேளதாளங்கள் முழங்க கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பால் காவடி, தீர்த்த காவடி, இளநீர் காவடி, மயில் காவடி உள்ளிட்ட பல்வேறு காவடிகள் எடுத்து வந்தனர். காவடிகளுக்கு வழிபாடு நடைபெற்ற பின் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தனர். அதன் பின் பழநி முருகன் கோயிலுக்கு சென்று அங்கு காவடிகளை செலுத்தி வழிபாடு செய்தனர். சர்க்கரை, பேரிச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய், ஏலக்காய், வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களுடன் பெரிய அண்டாக்களில் 15 டன் அளவுள்ள பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பின் இரவில் வெளிப்பிரகாரத்தில் பர்வத ராஜகுல மக்கள் தங்கி இருந்தனர். பக்தர்களுக்கு பஞ்சாமிர்தம் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இன்று அவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே வளையனேந்தல் கிராமத்தில் உள்ள கூம்பாச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: கடைசி தை செவ்வாய்க்கிழமை என்பதால், சிறுவாபுரி முருகனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar