Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனாதன தர்மம் சர்ச்சையின் தாக்கம்; ... நெல்லை டவுன் ஈசான மடத்தில் கும்பாபிஷேகம் கோலாகலம் நெல்லை டவுன் ஈசான மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பச்சைசாத்தி கோலத்தில் சண்முகர் வீதி உலா

பதிவு செய்த நாள்

12 செப்
2023
10:09

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் ஆவணித் திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளியம்மன் சிவன் கோயிலில் இருந்து பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. ஆவணி திருவிழா 8ம் நாளான நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 5 மணிக்கு வெங்கு பாஷா மண்டபத்தில் இருந்து சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து வெள்ளை நிற மலர்கள் சூடி வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து சிவன் கோயிலை அடைந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பந்தல் மண்டபத்தில் உள்ள பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 12.05 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானை அம்மனுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிறப்பட்டு அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை பட்டு சாத்தி வழிபட்டனர். ஆவணி திருவிழாவில் முக்கிய நிகழ்சியான 10 நாளான நாளை 13ம் தேதி காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், கோயில் இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், கார்த்திகை தீபத் திருவிழா பத்தாம் நாள் விழாவை ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், மூலவருக்கு தங்க கவச சேவை இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் சக்கரதீர்த்த முக்கொடி விழா இன்று வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
காசி; அஹில்யாநகரைச் சேர்ந்த 19 வயதான தேவவ்ரத் மகேஷ் ரேகே, சுக்ல யஜுர்வேதத்தின் (மத்யாக்னி ஷாகா) மிகவும் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் கைசிக ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. வைர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar