Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டி சுயம்பிரகாச ஈஸ்வரர் ... ராமேஸ்வரத்தில் கங்கை நீருடன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஹிந்து மதம் அறிவு சார்ந்தது; சுவாமி சிவயோகானந்தா நெகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2023
06:09

மதுரை: ”ஹிந்து மதம் அறிவு சார்ந்தது”, என மதுரை சின்மயா மிஷன் தலைவர் சுவாமி சிவயோகானந்தா தெரிவித்தார்.

மதுரை காஞ்சி காமகோடி பீட மடத்தில் பகவத் கீதை சொற்பொழிவு நடக்கிறது. தலைவர் ராமசுப்ரமணியன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் வெங்கட்ரமணி, குமார், ராமகிருஷ்ணன், வெங்கடேசன், ஸ்ரீராமன் , பரத்வாஜ், ஸ்ரீதர் கலந்து கொண்டனர். சுவாமி சிவயோகானந்தா பேசியதாவது: ஒளிவு, மறைவுவற்ற மனிதர்களிடம் தான் கடவுள் அதிக ஈர்ப்பு கொண்டிருப்பார். மனிதனுக்கு கிடைக்கும் உண்மையான செல்வம் அறிவு. ஞானத்திற்கும், புத்திக்கும் உள்ள வித்தியாசத்தை பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் உபதேசமாக வழங்கினார். மனிதன் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் தன்னுடைய எண்ணங்களை தவறாக மாற விடக்கூடாது. கடினமான சூழ்நிலையை கையாளும் போது புத்தியானது ஞானத்தை அடைவதற்கான வழியை தேடுகிறது. ஒரு செயலை செய்யும் முன் சோம்பேறித்தனம் நம்மை ஆட்கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பன்முகத் தன்மையோடு எந்த செயலிலும் ஆராய்ந்து செயல்பட வேண்டும். ஹிந்து மதம் அறிவு சார்ந்தது. வாழ்க்கையில் அனைவரும் ஏதாவது ஒன்றை அடைவது என்ற எண்ணம் இருக்க வேண்டும். அப்போது தான் ஞானம் என்பதை நோக்கி செல்ல மனம் முயலும். புத்தி என்பது லோக்சபா உறுப்பினர்கள் போன்றது. இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தான் ஞானம் எனும் பிரதமரை தேர்ந்தெடுக்கின்றனர். மனிதர்களும் மனதின் அனைத்து எண்ணங்களையும் ஒன்று சேர்த்து ஞானம் பெற முயல வேண்டும் என்றார். இன்றும், நாளையும் (செப். 13,14) மாலை 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. அனுமதி இலவசம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநியில் பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. திராளான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று பங்குனி உத்திர விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருத்தணி : திருத்தணி சுப்பிரமணி சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் பங்குனி உத்தர விழா; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்கும்பகோணம்; ... மேலும்
 
temple news
திருவாரூர்; தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர பாத தரிசன திருவிழா. பக்தர்களுக்கு இடது பாதத்தை காட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar