Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவிந்தா கோஷத்துடன் திருப்பதியில் ... தாமிரபரணி நதிக்கரை வெங்கடாஜலபதி கோயிலில் கருட சேவை தாமிரபரணி நதிக்கரை வெங்கடாஜலபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமெரிக்காவில் 10000 சிலைகளுடன் பிரமாண்ட கோவில்; அடுத்த மாதம் 8ம் தேதி திறப்பு
எழுத்தின் அளவு:
அமெரிக்காவில் 10000 சிலைகளுடன் பிரமாண்ட கோவில்; அடுத்த மாதம் 8ம் தேதி திறப்பு

பதிவு செய்த நாள்

25 செப்
2023
11:09

வாஷிங்டன்: அமெரிக்காவில் கட்டப்பட்டு வரும், பிரமாண்ட கோவிலின் கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியதை அடுத்து, அக்டோபர், 8ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்தக் கோவில், இந்தியாவிற்கு வெளியே கட்டப்பட்டுள்ள கோவில்களில், இரண்டாவது பெரிய கோவிலாக இருக்கும் என, நம்பப்படுகிறது. புதுடில்லியில் உள்ள அக்ஷர்தம் அமைப்புக்கு சொந்தமான லட்சுமி நாராயணன் கோவில் நிர்வாகத்தினர் தான், அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள ராப்பின்ஸ்வில்லே நகரிலும், இந்த பிரமாண்ட கோவிலை கட்டி வருகின்றனர். கண்கவர் கலைநயங்கள் மற்றும் வேலைப்பாடுகளுடன், இந்தக் கோவில், 183 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பகிறது. கடந்த, 2011ல் துவங்கிய இக்கோவிலின் கட்டுமானப் பணியில் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளதால், இதன் திறப்பு விழா அடுத்த மாதம், 8ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அனைத்து பணிகளும் முழு அளவில் நிறைவடைந்த பின், அக்டோபர், 18 முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. வேத முறைப்படி வடிவமைக்கப்பட்டுள்ள இக்கோவிலில், 10,000 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இந்திய கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை எடுத்துரைக்கும் வகையில், இசைக்கருவி வாசிக்கும் மற்றும் நடன அசைவுகளுடன் கூடிய சிற்பங்கள் பலவும் இடம் பெற்றுள்ளன. கருவறையுடன் கூடிய பிரதான கோவில், 12 துணை கோவில்கள், ஒன்பது கோபுரங்கள், பிரமிடு வடிவிலான ஒன்பது கோபுரங்களுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கோடை வெயில், மழை, குளிர் உட்பட எந்த கால நிலையையும் தாங்கும் வகையில், உலகத் தரம் வாய்ந்த கிரானைட் மற்றும் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சண்முகர் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திருஆனி சுவாதி உற்சவத்தை ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஆனி மாத நரசிம்ம பிரம்மோத்சவம், இன்று (4ம் தேதி) ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் நாளை (5ம் தேதி) மாலை 6 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar