அறுபத்து நான்காவது நாயனாராக போற்றப்படும் வாரியார் வழங்கும் நவராத்திரி – 1
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2023 01:10
திருமுருக கிருபானந்த வாரியார் பற்றி அறியாதார் இல்லை. அவர் நாவில் திருப்புகழும், கையில் திருப்பணியுமாக நடமாடும் திருத்தொண்டர். நாயன்மார்கள் வரிசையில் வைத்து அவரை அறுபத்து நான்காவது நாயனாராக வழிபடும் சிவநேயச் செல்வர்களும் இருக்கிறார்கள்.
ஒருவனுக்குத் தொடக்கத்தில் வலிமை வேண்டும். பின்னர் செல்வம், கல்வி வேண்டும். மரத்தில் கிளைகள் இருப்பது போல பராசக்தி மூன்று வடிவங்களில் மக்களுக்கு அருள்புரிகிறாள்
(வலிமை - பார்வதி, செல்வம் - லட்சுமி, கல்வி - சரஸ்வதி)
புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் இருந்து திரிதியை திதி வரை பார்வதியையும், சதுர்த்தியில் இருந்து சஷ்டி திதி வரை லட்சுமியையும், சப்தமியில் இருந்து நவமி திதி வரை சரஸ்வதியையும் வழிபட வேண்டும்.
புரட்டாசியில் வரும் நவமிக்கு மகாநவமி என்று பெயர்.
தஞ்சையில் மகாநவமி நோன்பிருக்கும் பக்தர்கள் கூடும் இடத்திற்கு மகாநவமி நோன்புச் சாவடி என்று பெயர் உண்டாயிற்று. இப்போது மானம்பூச்சாவடி என மருவி விட்டது. இந்த நோன்பிருந்து அம்பிகையை வழிபடுவோர் ஆற்றல், செல்வம், அறிவு பெற்று வாழ்வர். வழிபாடுகளில் சிறந்தது சக்தி வழிபாடு. தாயை வழிபட்டுத்தான். தந்தையை வழிபட வேண்டும். சத்திநிபாதம் (சக்தியின் அருள்) விளைந்த பின்னரே சிவாத்வைதம் (சிவனின் அருள்) உண்டாகும்.இதை பட்டினத்து சுவாமிகள்,
தாயுடன் சென்று தாதையைக் கூடிப் பின் தாயை மறந்து ஏயுமதே நிஷ்டையென்றான் கச்சி ஏகம்பனே என்கிறார். தந்தையை விட தாய் சிறந்தவள் என்பதால் சிவபெருமானை ஓர் இரவிலும்(சிவராத்திரி)
தாயாகிய பார்வதியை ஒன்பது இரவுகளிலும் (நவராத்திரி) வழிபடுகிறோம்.