Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... அகரம் முத்தாலம்மன் பூஞ்சோலை சென்றது; வான வேடிக்கையுடன் வரவேற்ற பக்தர்கள்! அகரம் முத்தாலம்மன் பூஞ்சோலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே இடத்தில் 12 அம்மன்களின் சப்பர பவனி ; பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
ஒரே இடத்தில் 12 அம்மன்களின் சப்பர பவனி ; பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

25 அக்
2023
03:10

திருநெல்வேலி; பாளையில் 12 அம்மன் கோயில்களில் தசரா விழா சப்பர பவனி துவங்கியது. இன்று நள்ளிரவு மகிஷாசூரசம்ஹாரம் நடக்கிறது.

பாளை பகுதி அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நவராத்திரி தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்படும். பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தசரா விழா துவங்கியது. அங்கு தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தூத்துவாரி அம்மன், வடக்கு, தெற்கு முத்தாரம்மன், யாதவர் உச்சினிமாகாளியம்மன், கிழக்கு உச்சினிமாகாளியம்மன், வடக்கு உச்சினிமாகாளியம்மன், விஸ்வகர்ம உச்சினிமாகாளியம்மன், புதுப்பேட்டை உலகம்மன், புது உலகம்மன், வண்­ணார்பேட்டை பேராத்துச்செல்வியம்மன் கோயில்களிலும் தசராவையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஆயிரத்தம்மன் கோயிலில் நேற்று காலை பால்குடம், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. இதர அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரண்டு வந்து வழிபட்டனர். வண்ணார்பேட்டையில் பேராத்துச்செல்வியம்மன், முத்தாரம்மன் வீதியுலா நடந்தது. நேற்றிரவு 12 கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நிறைவு பெற்ற பின்பு சப்பர பவனி துவங்கியது.

12 சப்பரங்கள் அணிவகுப்பு: இன்று காலை 7 மணிக்கு ராமசாமி கோயில் திடல், மதியம் 3 மணிக்கு ராஜகோபாலசுவாமி கோயில் திடல், மாலை 6 மணிக்கு மார்க்கெட் திடலில் 12 அம்மன் சப்பரங்கள் அணிவகுப்பு நடக்கிறது. பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வைக் காண சுற்றுப்பகுதி மக்கள் திரண்டு வருவர். நேர்த்திக்கடன்களை செலுத்தி ஒரே இடத்தில் 12 அம்மன்களை தரிசிப்பர். நள்ளிரவு 12 மணிக்கு மேல் சமாதானபுரம் எரும கிடா மைதானத்தில் இதர அம்மன் சப்பரங்களின் அணிவகுப்புடன் ஆயிரத்தம்மன் மகிஷாசூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு நடக்கிறது. விழாவையொட்டி பாளை பகுதியில் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்; "பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் இன்று 1.28 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்களும், நேற்று வரை 59.31 ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜென்மபூமி மந்திரில் ராமரின் தெய்வீக தரிசனத்திற்காக இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகனை தரிசிக்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் பல ஆயிரம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில்  வருடாந்திர மகாசிவராத்திரி ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக பிரம்மோற்சவம் வெகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar