Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவில் கட்டுமானப்பணி ... தேவி கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் தேவி கருமாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதர்களில் இருந்த பத்தாம் நுாற்றாண்டு சிவலிங்கம், கொற்றவை சிலைகள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
புதர்களில் இருந்த பத்தாம் நுாற்றாண்டு சிவலிங்கம், கொற்றவை சிலைகள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

07 நவ
2023
01:11

திருச்சுழி : திருச்சுழி அருகே 10ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம், கொற்றவை சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே உலக்குடியில் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் கள ஆய்வாளர்கள் ஸ்ரீதர், தாமரைக்கண்ணன் ஆய்வு செய்தனர். அங்கு பாண்டியர்கள் கால சிலைகளை கண்டறிந்தனர். அவர்கள் கூறியதாவது: உலக்குடியில் வடக்கு திசையில் விவசாய நிலத்தின் ஓரமாக புதர்களில் ஒரு சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் சதுர வடிவ ஆவுடையுடன் செதுக்கப்பட்டுள்ளது. ஆவுடையானது இரண்டாக உடைந்துள்ளது. இது 10ம் நுாற்றாண்டில் இருந்த முற்கால பாண்டியர் காலத்தை சேர்ந்தது. சிவலிங்கம் அருகே கொற்றவை சிலை உள்ளது. இது முற்றுப்பெறாத சிலை. தலைப்பகுதி கரண்ட மகுடமும், காதுகளில் காதணியும் உள்ளது. வலது கை கத்தியை பிடித்த படியும், இடது கையை கீழே தொங்கவிட்டும் அந்த கரத்தில் தெளிவற்ற ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது. சிலை 3 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும் புடைப்புச் சிற்பமாக உள்ளது. இவற்றின் காலமும் சிவலிங்கத்தின் காலமும் ஒன்றாக கருதலாம். உலக்குடி பஸ் ஸ்டாப் அருகே பிற்கால பாண்டிய காலத்தில் சேர்ந்த விஷ்ணு சிலை நின்ற கோலத்தில் உள்ளது. இது 4 அடி உயரத்தில் உள்ளது. 4 கரங்களுடன் வலது மேற்கரத்தில் சக்கரம் இடது மேற்கரத்தில் சங்கும் உள்ளது. வலது முன் கரத்தில் அபயம் காட்டியும், இடது முன்கரம் கடி ஹஸ்தமாகவும் வைத்து நின்ற கோலத்தில் உள்ளது. தலையில் கிரீட மகுடமும் மார்பில் முப்புரி நூலும் இடையில் இடைக்கச்சையுடன் உள்ளது. இது போன்ற சிலைகள் இங்கே தொடர்ந்து கிடைப்பதால் ஒரு சிவன் கோவில் இருந்து அழிந்து இருக்கக் கூடும் என கருதலாம் என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 
temple news
உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar