ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் டோலோத்ஸவம்; சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09நவ 2023 03:11
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் (டோலோத்ஸவம்) 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி 9ம் நாளான இன்று நம்பெருமாளுக்கு சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து ஊஞ்சல் மண்டபத்தில் சிறப்பு சேவையில் பெருமாள் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.