பாலக்காடு: குருவாயூரில் செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது.
கேரளாவின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கார்த்திக்கை மாதம் ஏகாதசி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் வரும் 27ம் தேதி நடக்க உள்ளது. உற்சவத்தை முன்னிட்டு நடக்கும் செம்பை சங்கீத உற்சவத்தின் துவக்க விழா நேற்று நடக்க இருந்தது. ஆனால் விழா ரத்து செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் செம்பை நினைவு விருது, பிரபல இசைக்கலைஞர் மதுரை சேஷகோபாலுக்கு தேவஸ்தான அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழங்கும் நிகழ்ச்சி மட்டும் மேல்புத்தூர் கலையரங்கில் நடந்தது. இந்த நிலையில் இன்று காலை விருது பெற்ற இசைக்கலைஞர் சேஷகோபாலின் சங்கீத அர்ச்சனை நடந்தன. இவருக்கு சம்பத் (வயலின்), ஹரிநாராயணன் (மிருதங்கம்), திருப்பூணித்துறை ராதாகிருஷ்ணன் (கடம்), மணிகண்டன் (தம்புரா) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். முன்னதாக கோவில் தந்திரி பிரஹ்மஸ்ரீ தினேசன் நம்பூதிரி சங்கீத மண்டபத்தில் குத்துவிளக்கு ஏற்றினர். தொடர்ந்து செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது. ஏகாதசி உற்சவ நாள் வரை இந்த சங்கீத உற்சவம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.