Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசர்கோடு மகாவிஷ்ணு கோயில் ... பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி அமாவாசை வழிபாடு பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் ஐப்பசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் ரூ.100 ஆக இருந்த தரிசன கட்டணம் ரூ.1000மாக உயர்வு; பக்தர்கள் அதிர்ச்சி
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் ரூ.100 ஆக இருந்த தரிசன கட்டணம் ரூ.1000மாக உயர்வு; பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

13 நவ
2023
11:11

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று காலையில் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. கந்த சஷ்டி விழா முன்னிட்டு தரிசன கட்டணம் உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா இன்று காலையில் துவங்கியது. காலை 7 மணிக்கு யாகசாலை பூஜையுடன் திருவிழா துவங்கியது. காலை 9 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானை அபிஷேக அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 18ம் தேதி மாலையில் கடற்கரையில் நடக்கிறது. திருவிழா நாட்களில் தங்கி விரதம் இருக்கும் பக்தர்களுக்காக கோயில் வளாகத்தில் 21 இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலையில் இருந்தே பக்தர்கள் திருச்செந்தூரில் குழும துவங்கிவிட்டனர். பாதுகாப்பிற்காக 2500 போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பணியமர்த்தப்படுகின்றனர். இந்நிலையில் கந்த சஷ்டி விழா முன்னிட்டு ரூ.100 ஆக இருந்த விஸ்வரூப தரிசன கட்டணம் ரூ.2,000. சாதாரண நாளில் ரூ.500 ஆகவும், விஷேச நாளில் ரூ.2,000 ஆகவும் இருந்த
அபிஷேக தரிசன கட்டணம் ரூ.3,000.  விரைவு தரிசன கட்டணம் ரூ.100 ஆக இருந்தது ரூ.1000 ஆக உயர்வு, 2022ல் நிர்ணயித்த சிறப்பு தரிசன கட்டணத்தை திடீரென இன்று உயர்த்தியதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம் கடந்த டிசம்பர் மாதம் விமர்சியாக நடைபெற்றது. நீண்ட ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூசம் ஜன.26ல் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்க ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருநாங்கூரில் 11 தங்க கருட சேவை உற்சவம்- 11 பெருமாளும் ஒரே இடத்தில் எழுந்தருள பக்தர்கள் ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை; ஆலங்குடியில் இரண்டாவது குரு ஸ்தலமாக திகழும்  தர்மசம்வர்தினி அம்பாள் சமேத ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் அமாவாசை நாளில் போலி புரோகிதர்கள் உலா வருவதால், பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar