Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சிவ ... டில்லியில் சத் பூஜை நிறைவு ; ஜெய் சத்திமையா என முதல்வர் வாழ்த்து டில்லியில் சத் பூஜை நிறைவு ; ஜெய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சாவூர் பெரிய கோவில் நிழல் தரையில் விழாதாம்: 3ம் வகுப்பு புத்தகத்தில் தவறான தகவல்
எழுத்தின் அளவு:
தஞ்சாவூர் பெரிய கோவில் நிழல் தரையில் விழாதாம்: 3ம் வகுப்பு புத்தகத்தில் தவறான தகவல்

பதிவு செய்த நாள்

21 நவ
2023
11:11

தஞ்சாவூர் : உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலின் சிற்பங்களை காண தினமும் ஆயிரக்கணக்கனோர் வந்து செல்கின்றனர்.

பெருமை மிக்க இந்த பெரிய கோவிலை பற்றி, மக்கள் மத்தியில் பல வகையான நம்பிக்கைகளும், கட்டுக்கதைகளும் உலவுகின்றன. குறிப்பாக, பெரிய கோவில் விமான கோபுரத்தின் நிழல் தரையில் விழாது. அந்த அளவுக்கு அற்புதமாக கட்டியுள்ளனர் என்று பலரும் நம்புகின்றனர். ஆனால், கோபுரத்தின் நிழல் தரையில் விழும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, தமிழக அரசு பாடநுால் கழகத்தில் அச்சிடப்பட்டுள்ள, மூன்றாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் என்ற தலைப்பில், 80வது பக்கத்தில், இருவர் உரையாடல் போன்ற பாடம் உள்ளது. அதில், பெரிய கோவில் நிழல் தரையில் விழாது என்ற தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த தகவல் தவறானது என்பதால், கேள்விகளை தவிர்க்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

பெரிய நந்தி வளர்கிறதா?; வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் மணிமாறன் கூறியதாவது: கோவில் கோபுரத்தின் நிழல் கீழே விழாது என்ற தகவல், கோவில் கட்டுமானத்தின் பிரமாண்டத்தை கூறுவதற்காக சொல்லப்பட்ட ஒரு தவறான தகவல். இதை பலரும் உண்மை என்று நம்புகின்றனர். காலை நேரத்தில் கோபுரத்திற்கு பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும். அதுபோல, கோவிலில் உள்ள பெரிய நந்தி வளர்கிறது, விமானத்தின் கோபுரம், 80 டன் எடை உடைய ஒரே கல்லால் ஆனது என்றெல்லாம் பல தவறான தகவல்கள் பரவுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரயாக்ராஜ்: உத்தரபிரதேசம் கும்பமேளாவில் இதுவரையில் 50 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் திரிவேணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; அனந்த சரஸ் திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  வரதராஜ பெருமாளுடன் 7 முறை ... மேலும்
 
temple news
திருப்பூர்; கதித்தமலை ஸ்ரீவெற்றிவேலாயுதசாமி கோவிலில் நேற்று, மலை மீது தேரோட்டம் நடந்தது; பக்தர்கள், ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; ஓமன் நாட்டில், தைப்பூசத்தையொட்டி, பேரூர் சதய விழா குழுவினர், திருமுருக பெருவிழா தமிழ் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலில் தரிசனம் செய்ய வந்த ஆந்திர துணை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar