Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் அர்ச்சகர் ... ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்? ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

21 நவ
2023
04:11

மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருவாவடுதுறையில் பழமை வாய்ந்த சைவத் திருமடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்து குருபீடத்தில் 23வது குருமகா சன்னிதானமாக திருநெல்வேலி மாவட்டம்  விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய  சுவாமிகள் 1983 முதல் 2012 வரை ஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில் பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டதுடன், சைவ சமய வளர்ச்சிக்கு பல்வேறு அரும்பணிகளும் செய்துள்ளார். கடந்த 2012ம்  ஆண்டு இவர் சிவ பரிபூரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச  தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை கார்த்திகை சதய திருநாளில் நடைபெறும். இவ்வாண்டு ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த கார்த்திகை சதய நாளான இன்று குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு திருவாவடுதுறை மறைஞான தேசிகர் தபோவனத்தில் அமைந்துள்ள சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருமூர்த்தத்தில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையை செய்து வைத்தார். இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முதல் திருமுறை( மூலம்) மற்றும் குங்கிலியக்கலய நாயனார் என்னும் இரு விழா மலர்களை வெளியிட்டார். தொடர்ந்து ஆதின திருமடத்தில் மாகேசுவர பூஜை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar