Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ராமர் கோவிலில் அர்ச்சகர் ... ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி என்று கூப்பிடுவது ஏன்? ஐயப்ப பக்தர்கள் மற்றவர்களை சாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:
திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

21 நவ
2023
04:11

மயிலாடுதுறை; திருவாவடுதுறை ஆதீனத்தில் 23வது குருமதா சன்னிதானம் குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, திருவாவடுதுறையில் பழமை வாய்ந்த சைவத் திருமடங்களில் ஒன்றான திருவாவடுதுறை ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்து குருபீடத்தில் 23வது குருமகா சன்னிதானமாக திருநெல்வேலி மாவட்டம்  விக்கிரமசிங்கபுரத்தில் தோன்றிய ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய  சுவாமிகள் 1983 முதல் 2012 வரை ஞானபீடத்தில் எழுந்தருளி அருளாட்சி செய்து வந்தார். இவர் காலத்தில் பல்வேறு கோவில் கும்பாபிஷேகங்கள் செய்து வைக்கப்பட்டதுடன், சைவ சமய வளர்ச்சிக்கு பல்வேறு அரும்பணிகளும் செய்துள்ளார். கடந்த 2012ம்  ஆண்டு இவர் சிவ பரிபூரணம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து ஆண்டு தோறும் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச  தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருபூஜை கார்த்திகை சதய திருநாளில் நடைபெறும். இவ்வாண்டு ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகள் பரிபூரணமடைந்த கார்த்திகை சதய நாளான இன்று குருபூஜை விழா நடைபெற்றது. குருபூஜையை முன்னிட்டு திருவாவடுதுறை மறைஞான தேசிகர் தபோவனத்தில் அமைந்துள்ள சிவப்பிரகாச தேசிக பரமாசாரிய சுவாமிகளின் குருமூர்த்தத்தில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீன 24 ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனையை செய்து வைத்தார். இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் முதல் திருமுறை( மூலம்) மற்றும் குங்கிலியக்கலய நாயனார் என்னும் இரு விழா மலர்களை வெளியிட்டார். தொடர்ந்து ஆதின திருமடத்தில் மாகேசுவர பூஜை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar