செஞ்சி; செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் குங்குமத்தால் லட்சார்சனை நடந்தது.
செஞ்சி அடுத்த செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் ஏக தின லட்சார்சனை நடந்தது. இதை முன்னிட்டு காலை 7 மணிக்கு லலிதா செல்வாம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் செய்தனர். 9 மணிக்கு ஈஸ்வரன் குருக்கல் தலைமையில் 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்கள் குங்குமத்தால் லட்சார்ச்சனை நடத்தினர். 50 க்கும் மேற்பட்ட பெண்கள் லலிதா செல்வாம்பிகை பாசுரம் படித்தனர். இதில் அறங்காவலர் இராமகன்னியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.