திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா; சுவாமி சிலைகள் தூய்மைப்படுத்து பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16டிச 2023 09:12
காரைக்கால்; காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு சுவாமி சிலைகள் தூய்மைப் படுத்துபணி தீவிரம்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோயிலின் ஸ்ரீ சனிபகவான் தனிச்சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகவிமர்சையாக சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இக்கோவிலில் வரும் 20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20மணிக்கு ஸ்ரீசனீஸ்வரபகவான் மகர ராசியிலிருந்து, கும்பராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மற்றும் ரூ.1000, ரூ.600, ரூ. 300 உள்ளிட்ட கட்டண தரிசனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் சனிபெயர்ச்சி விழாவிற்கு தமிழகம் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்தும் வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வரும் நிலையில் கோயில் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் கோவில் கோபுரங்களில் மின் விளக்குகள் அலங்கரிக்கும் பணிகள் கோவிலில் உள்ள அனைத்து சுவாமி சிலைகள், வெள்ளிபூஜை பொருட்கள் தூய்மைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கும் பணி, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இலவச தரிசனம், கட்டண தரிசனம் செல்லுவதற்கு கோயிலில் உள்ளேயும் வெளியேயும் நீண்ட வரிசையில் பாதை அமைக்கும் பணியும் சாரம் சுட்டும் பணியும் செய்யப்பட்டு வருகிறது மற்றும் நளம் தீர்த்தம் குளத்தில் புதிய தண்ணீர் மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது. மேலும் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில்நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகள் சிறப்பாக செய்து வருகிறது.