பழநி; பழநி, பெரிய நாயகி அம்மன் கோயில் வருடாபிஷேகம் யாக பூஜை நடைபெற்று மாலையில் திருக்கல்யாணம் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள உப கோவிலான கிழக்கு ரத வீதியில் பெரிய நாயகி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நேற்று வருடாபிஷேகம் நடைபெற்றது. புனிதநீர் நிரப்பிய, கலசங்கள் வைத்து சிறப்பு யாக பூஜை நடைபெற்றது. இதில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. யாக பூஜைக்கு பின் பிரகதீஸ்வரர் உடனமர் பெரியநாயகி அம்மன், திருக்கல்யாணம் நடைபெற்றது. சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. ரிஷப வாகனத்தில் சுவாமி, பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதில் கண்பத் கிராண்ட் ஹரிஹரமுத்து அய்யர், கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உற்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.