Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன் அய்யனார் கோயிலில் புரவி ... 990 கி.மீ., பாதயாத்திரையாக சபரிமலை புறப்பட்ட பக்தர்கள் 990 கி.மீ., பாதயாத்திரையாக சபரிமலை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; வனத்துறை அனுமதி மறுப்பால் ஏமாற்றம்.. கேட் முன்பு சூடமேற்றி திரும்பிச் சென்றனர்
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; வனத்துறை அனுமதி மறுப்பால் ஏமாற்றம்.. கேட் முன்பு சூடமேற்றி திரும்பிச் சென்றனர்

பதிவு செய்த நாள்

16 டிச
2023
03:12

வத்திராயிருப்பு; சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, இன்று சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதிக்க மறுத்ததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். நீதிமன்ற உத்தரவின்படி நாளை (டிசம்பர் 17) ஒரு நாள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

புலிகள் காப்பகமாக இப்பகுதி அறிவிக்கப்படும் முன்பு வரை மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு, இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முதல் நாள் மலையேறும் பக்தர்கள் இரவு கோயிலில் தங்கி மார்கழி மாத பிறப்பு நாளன்று காலையில் சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். ஆனால், புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்ய இன்று ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் குவிந்தனர். ஆனால், அவர்களை வனத்துறையினர் அனுமதிக்க மறுத்தனர். இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் வனத்துறை கேட் முன்பு சூடமேற்றி கோயிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின் படி இன்று (டிச. 17) காலை 6:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும், இரவு தங்க அனுமதி கிடையாது எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடந்தது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெண்காடு கோவிலில் இன்று நடந்த பட்டினத்தார் சிவபூஜை  செய்யும் நிகழ்வில் திரளான ... மேலும்
 
temple news
திருமலை; இனிமேல், ஸ்ரீவாரி பக்தர்களுக்கு ஒவ்வொரு நாளும் ஏழுமலையானை தரிசனம் செய்யமுடியும். இந்தப் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 63 நாயன்மார்களுக்கு குருபூஜை விழா ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஆக.5ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar