Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்; ... உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ஆருத்ரா தரிசன விழா; டிச.,26ல் சந்தனம் படி களைதல் உத்தரகோசமங்கை மரகத நடராஜருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
990 கி.மீ., பாதயாத்திரையாக சபரிமலை புறப்பட்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
990 கி.மீ., பாதயாத்திரையாக சபரிமலை புறப்பட்ட பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 டிச
2023
03:12

கொப்பால்; கொப்பாலில் இருந்து சபரிமலைக்கு மாலை அணிந்த அய்யப்ப பக்தர்கள், 990 கி.மீ., பாதயாத்திரையை துவக்கி உள்ளனர்.

ஆண்டுதோறும் சபரிமலை அய்யப்பனுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி சுமந்து, பொங்கலன்று சபரிமலையில் ஜோதி வடிவில் அய்யப்பனை தரிசனம் செய்கின்றனர். இதற்காக பலரும் கேப், பஸ்களில் பயணிக்கின்றனர். இதுபோன்று, கொப்பால் மாவட்டம் கங்காவதியை சேர்ந்த நுாற்றுக்கணக்கான அய்யப்ப பக்தர்கள், அய்யப்பனுக்கு 48 நாட்கள் விரதம் துவக்கினர். நேற்று முன்தினம் பாதயாத்திரையாக புறப்பட்டனர். கங்காவதியில் இருந்து 990 கி.மீ., தொலைவில் உள்ள கேரள மாநிலம் சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க, குருசாமி கிரண்குமார் தலைமையில் புறப்பட்டனர். தினமும் அதிகாலை 4:00 மணிக்கு பாதயாத்திரையை துவக்கி, 10:00 மணிக்கு முடிப்பர். காலை சிற்றுண்டி சாப்பிட்ட பின் ஓய்வெடுப்பர். மதியம் 3:00 மணிக்கு மீண்டும் பாதயாத்திரை துவக்கி, மாலை 6:00 மணிக்கு நிறைவு செய்வர்.

இப்படி தினமும் 35 முதல் 40 கி.மீ., துாரம் நடந்து செல்ல உள்ளனர். செல்லும் வழியில், உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். பின், தங்களிடம் உள்ள தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் பிடித்து கொள்வர். இரவில் ஆங்காங்கே தங்கி ஓய்வெடுப்பர். காலையில் மீண்டும் பாதயாத்திரை துவக்குவர். 28 நாட்கள் பாதயாத்திரையாக சென்று, ஜனவரி 15ம் தேதி சபரிமலையில் தோன்றும் ஜோதியை தரிசனம் செய்து விட்டு திரும்ப முடிவு செய்துள்ளனர். குருசாமி கிரண்குமார் தலைமையில் பாதயாத்திரை புறப்பட்ட அய்யப்ப பக்தர்கள். இடம்: கங்காவதி, கொப்பால்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை அருகே திருமூர்த்திமலை பாலாற்றங்கரையில், பிரசித்தி பெற்ற சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ... மேலும்
 
temple news
மதுரை;  மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; முருகனின் மறு ரூபமான வேலினை வழிபட்டால் நன்மை உண்டாகும் என, 108 திருவேல் பூஜையில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
கோவை; கோவை பெரியநாயக்கன்பாளையம் - குப்பிச்சிபாளையம் ரோடில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar