Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ... வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை வடமதுரை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நாளை தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நாளை தங்க அங்கி அணிவித்து தீபாராதனை; அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

25 டிச
2023
04:12

சபரிமலை; சபரிமலையில் நாளை மாலை ஐயப்பனுக்கு தாங்கி அணிவித்து தீபாராதனை நடைபெறுகிறது. நாளை மறுதினம் நடைபெறும் மண்டல பூஜையுடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.

கடினமான விரதம், முழுமையான அர்ப்பணிப்புடன் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் 41 நாட்கள் நீண்டு நடைபெற்ற மண்டல காலத்தின் நிறைவு பூஜைகள் இன்றும், நாளையும் சபரிமலையில் நடைபெறுகிறது. கடந்த 23-ல் ஆரன்முளா பார்த்தசாரதி கோயில் இருந்து புறப்பட்ட தங்க அங்கி பவனிநாளை மாலை சன்னிதானம் வந்தடையும். அந்த அங்கியை தந்திரி மகேஷ் மோகனரரு, மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி ஆகியோர் பெற்று ஐயப்பன் விக்கிரகத்தில் அணிவித்து தீபாராதனை நடைபெறும்.

நிறைவாக நாளை மறுதினம் காலை 10:30 முதல் 11 30 க்குள் மண்டல பூஜை நடைபெறும். இந்த நேரத்தில் ஐயப்பனுக்கு தேவசம்போர்டு சார்பில் சிறப்பு கலபாபிஷேகம் நடைபெறும் தொடர்ந்து தங்க அங்கிஅணிவித்து மண்டல பூஜை நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 9:00 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு இந்த ஆண்டுக்கான மண்டல காலம் நிறைவு பெறும்.

தங்க அங்கி நாளை வருவதையொட்டி நிலக்கல் - பம்பை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி காலை 11:00 மணி வரை வரும் வாகனங்கள் மட்டுமே நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு செல்ல அனுமதிக்கப்படும். அதன்பின்னர் வரும் வாகனங்கள் பகல் 2:00மணிக்கு பின்னர் தான் பம்பை செல்ல அனுமதிக்கப்படும். மேலும் இன்று மதியம் முதல் தங்க அங்கி சன்னிதானம் வந்து சேரும் வரை பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு பக்தர்கள் செல்ல கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar