Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அருணாசலேஸ்வரர் கோயிலில் லட்டு ... பிறந்தது புத்தாண்டு 2024: தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு வழிபாடு.. நள்ளிரவு நடைபெற்ற ஐயப்ப பூஜை பிறந்தது புத்தாண்டு 2024: தேவாலயங்கள், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களுக்கு கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை அளிக்கும் வசதி அறிமுகம்
எழுத்தின் அளவு:
கோவில்களுக்கு கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை அளிக்கும் வசதி அறிமுகம்

பதிவு செய்த நாள்

31 டிச
2023
04:12

சென்னை: கோவில்களுக்கு பக்தர்கள், கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை செலுத்தும் வசதியை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார்.

சென்னையில் உள்ள அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில், சுவாமி படங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள, 2024ம் ஆண்டுக்கான காலண்டரை, அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டார். கோவில்களுக்கு பக்தர்கள், கியூ.ஆர்., குறியீடு வழியே நன்கொடை செலுத்தும் வசதி; இணைய தளம் வழியாக, 7,233 கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதியையும், அவர் துவக்கி வைத்தார்.

அதன்பின் அவர் அளித்த பேட்டி: இணையதளம் வழியே கோவில்களுக்கு நன்கொடை செலுத்தும் வசதி, 2021ம் ஆண்டு 47 முதுநிலை கோவில்களில் அறிமுகமானது. இரண்டு ஆண்டுகளில், 5.61 கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டுள்ளது. இத்திட்டம் பக்தர்களிடம் வரவேற்பை பெற்றதால், 7,233 கோவில்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டு உள்ளது. நன்கொடை வழங்கியதற்கான ஒப்புகை, மின்னணு ரசீது, வருமான வரி சலுகை சான்றிதழ் ஆகியவை, எஸ்.எம்.எஸ்., வழியே, நன்கொடையாளருக்கு அனுப்பி வைக்கப்படும். அதை பயன்படுத்தி, ரசீது மற்றும் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம். சுவாமி படங்களுடன் கூடிய காலண்டர் 100 ரூபாய்க்கு விற்கப்படும். பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாணவர்களை தொன்மையான கோவில்களுக்கு சுற்றுலா அழைத்து செல்லும் கோரிக்கை வரவேற்கத்தக்கது. அனைத்து மதத்தினரும் படித்து வருவதால், அதற்கான சூழ்நிலையை பொறுத்து, இதை செயல்படுத்து வோம்.

சிறப்பு வழிபாடு: ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று சிறப்பு வழிபாடு நடக்கும் கோவில்களில், இந்த ஆண்டு வழக்கம்போல் நடக்கும். சில கோவில்களில், நள்ளிரவு 12:00 மணிக்கும், சில கோவில்களில் அதிகாலையும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடக்கும். இதில் மாற்றம் செய்யும்படி, அலுவலர்கள் எவ்வித அழுத்தமும் தர மாட்டார்கள். வழக்கமான நடைமுறையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சேகர்பாபு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
புதுடில்லி; சாத் பூஜை என்பது சூரியக் கடவுளுக்கு நன்றி சொல்ல நடத்தப்படும் விழாவாகும். வடமாநிலங்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் அஜித்குமார் சுவாமி தரிசனம் செய்தார்.தமிழ் சினிமாவின் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar