Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சந்தனகாப்பு அலங்காரத்தில் ... இன்று போகி பண்டிகை; நிலைப் பொங்கல்.. வீட்டில் குலதெய்வத்தை வழிபடுங்க..! இன்று போகி பண்டிகை; நிலைப் பொங்கல்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொடர் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தொடர் விடுமுறை; பழநி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

13 ஜன
2024
06:01

பழநி; பழநி முருகன் கோயிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

பழநி முருகன் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தர்கள் வருகை உள்ளது இன்று முதல் பொங்கல்விழா தொடர் விடுமுறை காரணமாக பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. ஐயப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. தைப்பூச விழா ஜன.,19 துவங்க உள்ளதால் பாதயாத்திரை பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. தைப்பூச பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி உள்ளிட்ட காவடிகள் எடுத்து வந்து, அழகு குத்தி, கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

கிரிவீதி பகுதியில் சமீபத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் செய்யப்பட்டது. ஆனால் சிறு சிறு கடைகள் தற்போது முளைத்துள்ளன. தள்ளுவண்டிக் கடைகள் மற்றும் எளிதில் நகர்த்திச் செல்லக்கூடிய கடைகள் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் வெளிமாநில வியாபாரிகள் சிலர் பக்தர்களிடம் வலுக்கட்டாயமாக பொருட்களை வாங்க வற்புறுத்துகின்றனர். இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் அடிவாரம் கிரிவீதி, அய்யம்புள்ளி ரோடு, பூங்கா ரோடு பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து டிக்கெட் பெறுகின்றனர். மேலும் மலைக் கோயிலில் பொது தரிசன வழி மற்றும் கட்டண தரிசன வழிகளில் 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். மலைக்கோயிலில் செல்போன் அலைபேசி கொண்டு செல்ல அனுமதி இல்லாத போதும் சில பக்தர்கள் அலைபேசிகளை எடுத்துச் செல்கின்றனர்.

கூட்டம் அதிகரிக்கும் நிலையில் மேலும் கூட்ட நெரிசலில் குழந்தைகள், சிறுவர்கள் தவறி செல்லும் சூழல் அதிகரித்துள்ளதால் பொது அறிவிப்பு மையங்களை அதிகரித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தரிசனம் முடிந்து பக்தர்கள் சொந்த ஊருக்கு செல்ல போதுமான பஸ் வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும். நேற்று போதுமான பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அதிக அளவில் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தனர். மேலும் பஸ்ஸில் சீட் பிடிக்க ஏறும் பயணிகளுக்கும் நடத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. மேலும் நெடுந்தூர பயண பேருந்துகளில் செல்லும் வழியில் உள்ள நகர நிறுத்தங்களில் இறங்கும் பயணிகளை அனைத்து இருக்கைகளும் நிரம்பிய பின்பு பஸ்ஸில் ஏற்றுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar