Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் ராம ... அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
1000 வயதை தாண்டிய அழகர்கோவில் கதவு; பிரமிக்க வைக்கும் நுண்ணிய மரச்சிற்பங்கள்
எழுத்தின் அளவு:
1000 வயதை தாண்டிய அழகர்கோவில் கதவு; பிரமிக்க வைக்கும் நுண்ணிய மரச்சிற்பங்கள்

பதிவு செய்த நாள்

17 ஜன
2024
12:01

அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர்கோயில் மூலவர் சன்னதிக்கு செல்லும் தொண்டமான் கோபுர நுழைவு வாயில் கதவு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து கோயில் துணைக்கமிஷனர் ராமசாமி கூறியதாவது: கள்ளழகர் கோயிலில் ஏராளமான கற்சிற்பங்கள் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுபோல தொண்டமான் கோபுர நுழைவு கதவு மற்றும் நிலைகள் மரச்சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து 1940ல் ராதாகிருஷ்ணா, "திருமாலிருஞ்சோலை மலை" என்னும் ஆங்கில நுாலில் குறிப்பிட்டுள்ளார்.இந்த நிலைக்கதவு 18 அடி உயரம், 9 அடி அகலம் உள்ளது. 200 க்கும் மேற்பட்ட நுண்ணிய மரச்சிற்பங்கள் இதில் செதுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பங்களில் சிவபெருமானின் மாறுபட்ட தோற்றங்கள், மகாவிஷ்ணுவின் அவதாரங்கள், கண்ணனின் லீலைகள், மகாபாரத கதைகள், வழிபாட்டு முறைகள், வாழ்வியல் தத்துவங்கள் என பலவித காட்சிகளை சிறுகுறைகூட இல்லாமல் மிகவும் துல்லியமாக செதுக்கியுள்ளனர். இது அக்கால மரச்சிற்பக் கலைஞர்களின் திறனை வெளிக்காட்டுவதாக உள்ளது. தொல்லியல் ஆய்வு மாணவர்கள் கோயில் ஸ்பதிகள் இதைப் பார்த்து ஒப்பில்லா மரச்சிற்ப வேலைகள் என கருத்து தெரிவிக்கின்றனர். இதுவரை இக்கதவுகளுக்கு எந்த வேலைப்பாடும் செய்யப்படவில்லை. சுத்தம் செய்து பாதுகாப்பாக பராமரித்து வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar