Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1000 வயதை தாண்டிய அழகர்கோவில் கதவு; ... ஜீவநதி நொய்யல் நதிக்கரையில் பொங்கல் திருவிழா; திருப்பூரில் கோலாகலம் ஜீவநதி நொய்யல் நதிக்கரையில் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜன
2024
12:01

திருவண்ணாமலை; இல்லற வாழ்வில், ‘ஊடலுக்கு பின், கூடல்’ என்பதை விளக்கும் வகையில், அருணாசலேஸ்வரர்  கோவிலில்  நேற்று, ‘திருவூடல்’ விழா  நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். சிவ பக்தரான பிருங்கி மகிரிஷி முனிவர், அருணாசலேஸ்வரரை காண, கிரிவலபாதையில் தவமிருந்தார். அவருக்கு காட்சியளிக்க அருணாசலேஸ்வரர் சென்றார். அப்போது, பராசக்தி அம்மன், தன்னை வணங்காத, பிருங்கி மகிரிஷிக்கு காட்சியளிக்க செல்லக்கூடாதென தடுக்க,   அதை மீறி அருணாசலேஸ்வரர் செல்ல, இதில், இருவருக்கும் ஏற்படும் ஊடலை விளக்கும் விழாவாக ‘திருவூடல்’ விழா நடந்து வருகிறது. அதன்படி நேற்றிரவு, 7:00 மணியளவில், மாடவீதியில் ஒன்றான திருவூடல் தெருவில், சுவாமிகள் இருவருக்கும் இடையே நடக்கும் ஊடலை, சுந்தரமூர்த்தி நாயனார் சமாதானம் செய்ய முயன்று, தோல்வியில் முடிந்து, அருணாசலேஸ்வரர்,  பிருங்கி மகரிஷிக்கு காட்சி கொடுக்க செல்லும் வைபவமும், செல்லும் வழியில் குமரக்கோவிலில் இரவு தங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.  இதை தொடர்ந்து, அருணாசலேஸ்வரர், இன்று, 17 ல் கிரிவலம் சென்று, பிருங்கி மகிரிஷிக்கு காட்சியளிக்கும் நிகழ்ச்சியும், செல்லும் வழியில், அருணாசலேஸ்வரர், கொள்ளையர்களிடம் நகையை  பறிகொடுத்து, கோவிலிற்கு திரும்பும் நிகழ்வும், பின்னர், உண்ணாமுலையம்மனுக்கும், அருணாசலேஸ்வரருக்கும், ‘மறு ஊடல்’ நடக்கும் நிகழ்வும் நடக்கும். இந்த நிகழ்வை காணும் தம்பதியினரிடையே, ஒற்றுமை பலப்படும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; வயலூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா நான்காம் நாள் -சண்முக அர்ச்சனை சிங்காரவேலர் ... மேலும்
 
temple news
ஒரகடம்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 27ம் தேதி நடைபெற உள்ளது.ஒரகடம் அடுத்த, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில், 108 மாணவியர் கந்தசஷ்டி பாராயணம் ... மேலும்
 
temple news
ஸ்ரீசத்ய சாய் பாபாவின், 100வது பிறந்த நாளை முன்னிட்டு, அனைவரையும் நேசி; அனைவருக்கும் சேவை செய் என்ற ... மேலும்
 
temple news
கோவை; கோவை காட்டூர் அருள்மிகு விநாயகர் - சுப்ரமணியர் - மாரியம்மன் கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar