அயோத்தி ராமஜென்பூமி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கும் அழைப்பிதழ்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜன 2024 11:01
புதுடில்லி : அயோத்தி வழக்கில் சர்ச்சை நிலம் யாருக்கு சொந்தம் என்ற விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வழங்கிய முன்னாள், இந்நாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமஜென்பூமியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்பிற்கே சொந்தம் என்றும், ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும் அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகெய் தலைமையிலான, நீதிபதிகள்எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், அப்துல் நசீர், சந்திரசூட் ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் 2019-ம் ஆண்டு நவ. 09-ம் தேதி 1,045 பக்க வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்புரை வழங்கினர். இதில் தற்போது சந்திரசூட் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ளார். மற்ற நீதிபதிகள் ஒய்வு பெற்றுவிட்டனர். இந்நிலையில் வரும் 22-ல் நடைபெற உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க தீர்ப்பளித்தவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.