Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்க்ஹில் முருகன் கோவிலில் தைப்பூச ... காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ வகைகளால் சிறப்பு அலங்காரம் காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா; பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
02:01

மயிலாடுதுறை; சீர்காழி புற்றடி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நாள்தோறும் இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வர். புற்றடி மாரியம்மனை மனம் உருக பிராத்தித்தால் சகல பாக்கியமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலில் தை முதல் வெள்ளிக்கிழமை காப்பு கட்டப்பட்டு கொடியேற்றத்துடன் உற்சவம் தொடங்கி நடைபெறும். இரண்டாவது வெள்ளிக்கிழமை அன்று தீமிதி உற்சவமும் அதனை முன்னிட்டு காலையில் தேர் திருவிழாவும் தொடர்ந்து பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து புற்றடி மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது இரண்டாவது வெள்ளியான இன்று மாலை தீமிதி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை தேர் திருவிழா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அலகு காவடி மற்றும் பால்குடம் எடுத்து வந்து மாரியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்து வழிபட்டனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் மாரியம்மனுக்கு மாவிளக்கு இட்டு வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், மாசி மாத உற்சவம், யானை அணிவகுப்புடன் வெகு விமரிசையாக ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக்கடன் வழிபாடுகளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar