Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ரூ.5 கோடி ... உடலை கத்தியால் கீறிக்கொண்டு பக்தர்கள் வினோத நேர்த்திக்கடன்! உடலை கத்தியால் கீறிக்கொண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வித்யாரம்பம் கோலாகலம் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 அக்
2012
10:10

கோவை: விஜயதசமி தினமான நேற்று, கோவையிலுள்ள பல்வேறு கோவில்களில், எழுத்தாணிப்பால் விழா(வித்யாரம்பம்) நடந்தது. நவராத்திரி நிறைவு நாளான விஜயதசமியில், குழந்தைகள் நன்கு படித்து, கலை மற்றும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டி, நோட்டு புத்தகங்கள் வைத்து வழிபடுவது வழக்கம். இந்நாளில்,எழுத்தாணிப்பால் விழா எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவில்களில், நடத்தப்படுகின்றன. தேன் தடவிய தங்கம் அல்லது வெள்ளி கம்பியை கொண்டு குழந்தைகளின் நாவில் ஓம் என எழுதி, மடியில் அமர வைத்து பச்சரிசி பரப்பிய ஒரு தட்டில் குழந்தையின் கையில் ஒரு மஞ்சள்துண்டு கொடுத்து, கையை பிடித்து ஓம் ஹரி; ஸ்ரீ கணபதியே நமஹ என, அகர வரிசையில் எழுதவும், உச்சரிக்கவும் நிகழ்ச்சியில், கற்றுத்தரப்படும்.ராஜவீதி - உப்பார வீதி சந்திப்பிலுள்ள, பேட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் எழுத்தாணிப்பால் விழா நேற்று நடந்தது. பேரூர் ஆதீனம் இளையப்பட்டம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். கணபதி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நால்வர் பெருமக்கள் வழிபாடு, குரு வழிபாடு, கலைமகள் வழிபாடு நடந்தது. திருவாசக பாடல்களை பாட, குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. நியூ சித்தாபுதூரிலுள்ள ஐயப்பன் சுவாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில், நேற்று நடந்த எழுத்தாணிப்பால் விழாவில், ஆயிரக்கணக்கான குழந்தைகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம் வரும் சிவராத்திரி தினம், மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. இந்த ... மேலும்
 
temple news
உசிலம்பட்டி; மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் மாசிப்பச்சை மகா ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ரத வீதியில் மாசி ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ் : திரிவேணி சங்கமத்தில் ஜன.13ம் தேதி தொடங்கிய மஹா கும்பமேளா இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது. ... மேலும்
 
temple news
நம் பாரத ஆன்மிக மரபில், மாசி மாதம் வரும் சிவராத்திரி, மஹா சிவராத்திரி திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar