Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேசியகொடி அலங்காரத்தில் உஜ்ஜைனி ... தியாகபிரம்ம மகோத்சவம் பாரத தேசத்தின் சொத்து தியாகபிரம்ம மகோத்சவம் பாரத ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் லட்சக்காணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் லட்சக்காணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பதிவு செய்த நாள்

27 ஜன
2024
12:01

காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குடியரசு தினவிழா தொடர் விடுமுறை என்பதால் லட்சக்காணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேச காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பலித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா கடந்த டிச.,20ம் தேதி நடைபெற்றது. சனிப்பெயர்ச்சி முடிந்தும் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் தினமும் சனீஸ்வர பகவானை தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தைபூசம்,குடியரசு தினவிழா என தொடர் விடுமுறையால் நேற்று முதல் பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று பல்வேறு பகுதியிலிருந்து லட்சக்காணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். முன்னதாக நளன் குளத்தில் நிராடி, கலிதீர்த்த விநாயகரை வணக்கி சிதறு தேங்காய் உடைந்து, அதிகாலை முதல் இரண்டு கிலோ மீட்டர் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைத்திறக்கப்பட்ட நிலையில் விசேஷ அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. சனீஸ்வர பகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம், பிஸ்கட், தண்ணீர் வழங்கப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர். எஸ்.பி.,சுப்ரமணியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் அறிவுசெல்வம், லெனின்பாரதி,செந்தில்குமார் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: 2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  அட்சய திருதியையொட்டி, கும்பகோணத்தில் ஒரே இடத்தில்  12 பெருமாள் கருட சேவை வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேர் அலங்கரிப்பதற்காக பந்தக்கால் ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் கண்ணை கவரும் வேலைபாடுகளுடன் கூடிய சல்லடம் எனும் ஆடை அணிந்து ... மேலும்
 
temple news
கோவை; சித்திரை மாதம் ரோகிணி நட்சத்திரம் மற்றும் அட்சய திருதியை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar