Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில் ... நமோ காட் : ஆன்மிக சுற்றுலா வரைபடத்தின் தவிர்க்க முடியாத பெருமை நமோ காட் : ஆன்மிக சுற்றுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு
எழுத்தின் அளவு:
பழநியில் தெப்ப உற்ஸவத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு

பதிவு செய்த நாள்

28 ஜன
2024
07:01

பழநி; பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவில் திருஊடல் நிகழ்ச்சி, தெப்பத்திருவிழா நடைபெற்று உற்ஸவம் நிறைவடைந்தது.

பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழா, ஜன.19ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் காலையில் தந்த பல்லாக்கு, புதுச்சேரி சப்பரத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. தைப்பூச திருவிழா உற்சவத்தில் ஜன.24ல் வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசாமி திருக்கல்யாணம் பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்றது. இரவு வெள்ளி ரதத்தில் ரத வீதியில் தேரோட்டம் நடைபெற்றது. ஜன.25. முத்துக்குமாரசாமி, வள்ளி, தெய்வானை தேரில் எழுந்தருளி திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. திருத்தேரோட்டம் ரத வீதிகளில் வலம் வந்தது. வெள்ளி ஆட்டுக்கடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்றது. ஜன.27 ல் இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளினார். இன்று (ஜன.28) தைப்பூச திருவிழாவில் பத்தாம் நாள் திருவிழாவான காலை, வள்ளி, முத்துக்குமாரசாமி திருமண வைபவத்தால், தெய்வானை கோபித்துக் கொள்ள, தூதரான விரபாகு சென்று சமாதானம் செய்து, கோயில் கதவை திறக்கும் திருவூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருக்கோயில் தெப்ப குள மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் சுவாமி எழுந்தருளி தெப்ப உற்ஸவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar