சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ சக்ரஸ்நானம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மார் 2024 03:03
சென்னை; தி.நகர் திருமலை திருப்பதி தேவஸ்தான பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தில் சக்ரஸ்நானத்தில் தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
சென்னை, தி.நகர் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவ விழா விழாவில் தினமும் தாயார் வெவ்வேறு வாகனங்களில் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். விழாவில் நேற்று காலை காலை ரத உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பத்மாவதி தாயார் ரதத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இன்று 7ம் தேதி சக்ர ஸ்நானம் நடைபெற்றது. தொடர்ந்து தாயாருக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.