மகா சிவராத்திரி; கோவில்களில் குவியும் பக்தர்கள்.. குடும்பம் செழிக்க குல தெய்வத்தை வழிபடுங்க
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 10:03
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும். மகா சிவராத்திரியான இன்று குல தெய்வத்தை வழிபடுவதால் சிவனின் அருளுடன் குல தெய்வ அருளும் கிடைக்கும். மகா சிவராத்திரி தினமான இன்று அதிகாலை முதல் மக்கள் தங்கள் முன்னோர்களின் வழி வந்த குல தெய்வ கோவில்களில் குவிந்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.