அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா; சிவனுக்கு ஐந்து கால பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 11:03
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் மாலை 4:30 மணி முதல் 5:30 மணி வரை பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவு 8:30 மணி முதல் 9:30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 10:30 மணி முதல் 11:30 மணி வரை இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு 12:30 மணி முதல் 1:30 மணி வரை மூன்றாம் கால பூஜை, அதிகாலை 3:30 மணி முதல் 4:30 மணி வரை நான்காம் கால பூஜையும், 5:30 மணி முதல் 6:30 மணி வரை உஷத் கால பூஜையாக ஐந்தாம் கால பூஜை நடைபெறுகிறது. மகா சிவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் (பொறுப்பு) மற்றும் அறங்காவலர்கள் உள்ளிட்டோர் செய்துள்ளனர். மேலும் மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை 7:00 மணி முதல் இரவு வரை உபயதாரர்கள் மூலம் அன்னதானம் கோவில் வளாகத்தில் வழங்கப்படுகிறது.