காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மார் 2024 05:03
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று( வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரியை யொட்டி அதிகாலை 2:30 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோவில் மலர்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றங்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு பின்டம் வைத்து வழி பட்டதோடு முடி காணிக்கை செலுத்தி, பின்னர் சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி ஆற்றங்கரையில் தற்காலிக குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தாகத்தை தீர்க்கும் வகையில் கோயில் வளாகத்தில் மட்டுமின்றி கோயில் சுற்றியுள்ள நான்கு கோபுரங்கள் அருகிலும் ( ஆர்.ஒ.ப்ளான்ட்) குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு வழக்கம்போல் வரும் வழியில் பக்தர்கள் வராது மாற்று வழியாக ம்ருத்யுஞ்சய சன்னதிக்கு பின்புறம் உள்ள மற்றொரு வழியில் கோயிலுக்கு வெளியில் பக்தர்கள் வர சிறப்பு வழி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிவராத்திரியையொட்டி இன்று (8.03.2024) அதிகாலை 5 மணி முதல் நாளை காலை 5 மணிவரை 11 கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. நாளை காலை (9.3.2024) அதிகாலை 4 மணிக்கு லிங்கோத்பவ தரிசனம் நடைபெறும்.இந்த அபிஷேகம் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். சிவபெருமான் என்றாலே அபிஷேக பிரியர் என்று மற்றொரு பெயர் ஆகையால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வழக்கமாக நான்கு கால அபிஷேகங்கள் நடப்பது வழக்கம் ஆனால் சிவராத்திரி அன்று 11 கால அபிஷேகங்கள் 24 மணி நேரம் நடைபெறுகிறது.