Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா சிவராத்திரி; திருமலையில் ... மாசி மகா சிவராத்திரி : ராமேஸ்வரம் கோயிலில் கங்கை நீருடன் பக்தர்கள் ஊர்வலம் மாசி மகா சிவராத்திரி : ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா; அதிகாலை முதல் நீண்ட வரிசையில் பக்தர்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

08 மார்
2024
05:03

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் , காளஹஸ்தி சிவன் கோயிலில் இன்று( வெள்ளிக்கிழமை) மகா சிவராத்திரியை யொட்டி அதிகாலை 2:30 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோவில் மலர்களாலும் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கோயில் அருகில் உள்ள சொர்ணமுகி ஆற்றங்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு பின்டம் வைத்து வழி பட்டதோடு  முடி காணிக்கை செலுத்தி, பின்னர் சொர்ணமுகி ஆற்றில் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய வந்தனர். ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக சொர்ணமுகி  ஆற்றங்கரையில் தற்காலிக குளியலறைகள் மற்றும் கழிப்பறைகளை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக தாகத்தை தீர்க்கும் வகையில் கோயில் வளாகத்தில் மட்டுமின்றி கோயில் சுற்றியுள்ள நான்கு கோபுரங்கள் அருகிலும் ( ஆர்.ஒ.ப்ளான்ட்) குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்துவிட்டு வழக்கம்போல் வரும் வழியில் பக்தர்கள் வராது மாற்று வழியாக ம்ருத்யுஞ்சய சன்னதிக்கு பின்புறம் உள்ள மற்றொரு வழியில் கோயிலுக்கு வெளியில் பக்தர்கள் வர சிறப்பு வழி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சிவராத்திரியையொட்டி இன்று (8.03.2024) அதிகாலை 5 மணி முதல் நாளை காலை 5 மணிவரை 11 கால சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. நாளை காலை (9.3.2024) அதிகாலை 4 மணிக்கு லிங்கோத்பவ தரிசனம் நடைபெறும்.இந்த அபிஷேகம் மிகச் சிறப்பு வாய்ந்தது ஆகும். சிவபெருமான் என்றாலே அபிஷேக பிரியர் என்று மற்றொரு பெயர் ஆகையால் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் வழக்கமாக நான்கு கால அபிஷேகங்கள் நடப்பது வழக்கம் ஆனால் சிவராத்திரி அன்று 11 கால அபிஷேகங்கள் 24 மணி நேரம் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப் பொங்கலை முன்னிட்டு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar