திருப்பரங்குன்றம் கோயிலில் மஞ்சள் பை வழங்கும் தானியங்கி இயந்திரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12மார் 2024 10:03
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவதை தவிர்த்து, மஞ்சள் பைகளை பயன்படுத்தும் வகையில் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் தானியங்கி மஞ்சள் பை வழங்கும் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அதில் இரண்டு 5 ரூபாய் நாணயங்கள் அல்லது ஒரு பத்துரூபாய் நாணயம் போட்டால் தானாக மஞ்சள் பை வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது.