பதிவு செய்த நாள்
12
மார்
2024
10:03
சிதம்பரம்; சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா 4ம் நாள் நிகழ்ச்சி தெற்குரதவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் நேற்று மாலை நடந்தது.
மார்ச்.8-ம் தேதி மகா சிவராத்திரியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா மார்ச்.12-ம் தேதி இன்று வரை நடைபெறுகிறது. நான்காம் நாள் நிகழ்ச்சிக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவர் டாக்டர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். விழாவில் துணைத்தலைவர் நடராஜன், ராமநாதன், செயலாளர் சம்பந்தம், பொருளாளர் கணபதி மற்றும் உறுப்பினர்கள் கணபதி, சபாநாயகம், டாக்டர் அருள்மொழிச்செல்வன், முத்துக்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நாட்டிய கலைஞர்களுக்கு பதக்கம் மற்றும் நினைவுப்பரிசினை வழங்கினர்.
நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டிய அஞ்சலி செலுத்தியவர்கள்: திட்டக்குடி ஶ்ரீ சிவதுர்கா நாட்டியாலயா மாணவியர்கள் பரதம், சிதம்பரம் தில்லை ஶ்ரீ சிவகாமி நாட்டியாலயா மாணவியர்கள் பரதம், சென்னை ஸ்ருதி ஸ்மிருதி நாட்டியரங்கம் மாணவியர்கள் பரதம், சென்னை கலாசிந்து நிகழ்கலைகள் மைய மாணவியர்கள் பரதம், கொல்கத்தா செளவிக் சக்ரபர்த்தி கதக் நாட்டியம், பெங்களூரு உபாத்யே நடனப்பள்ளி மாணவியர்கள் பரதம். நாக்பூர் ஶ்ரீ கிருஷ்ணா நிருத்யாலயாம் மாணவியர்கள் மோகினி ஆட்டம், பெங்களூரு குசுமா ரஞ்சிதா விவின் பரதம், மதுரை சப்தகன்னிகா பரதாலயா மாணவியர்கள் பரதம்.