பதிவு செய்த நாள்
13
மார்
2024
12:03
மார்த்தாண்டம்; நிலமாமூடு குந்நத்துக்கால் செழுங்கானூர் ஸ்ரீ மகாதேவர் கோவில் திருஆறாட்டு திருவிழா கடந்த 11ம் தேதி திருக்கொடி ஏற்றுதலுடன் துவங்கியது. ஸ்ரீதரருவாசுதேவன் திருக்கொடி ஏற்றினார். மாலை 6 மணிக்கு தங்க திருமுகவரவேற்பு, 6.30க்கு சுவாமிக்கு தங்கத்திருமுகம் அணிவித்து சிறப்பு தீபாராதனை, இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி நடந்தது. விழா நாட்களில் காலை 5.30 முதல் கணபதி ஹோமம், உஷ பூஜை , பந்தீரடி பூஜை , ஸ்ரீபூதபலி எழுந்தருளல் நடக்கிறது. 2ம்நாள் நேற்று மாலை 5 மணிக்கு பஜனை, ஐஸ்வர்யபூஜை , சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்றும், நாளையும் (13, 14ம் தேதிகளில்) இரவு 7 மணிக்கு பஜனை , 15ம் தேதி வெள்ளி காலை 9 மணிக்கு உற்சவபலி, இரவு 7 மணிக்கு இசை நிகழ்ச்சி, 16ம் தேதி சனி மாலை 5 மணிக்கு பஜனை , இரவு 7 மணிக்கு நடனம், 17ம்தேதி ஞாயிறு காலை 9 மணிக்கு யானை ஊர்வலம், தேவிக்கு குங்கும அபிஷேகம், இரவு 7 மணிக்கு வானவேடிக்கை நடக்கிறது. விழா நிறைவு நாள் 18ம் தே தி திரு ஆறாட்டு, அன்னதானம், மாலை 4 மணிக்கு சிவசகஸ்ரநாம ஜெ பம், 5 மணிக்கு திரு ஆறாட்டு, 6.30க்கு சிறப்பு பூஜை , இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சிகள் நடக்கிறது.