பதிவு செய்த நாள்
15
மார்
2024
04:03
கமுதி; கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் கணபதி ஹோமம், புண்யாகாவசனம், பூர்ணாஹூதி , தீபாராதனை நடந்தது. முத்துமாரியம்மனுக்கு பால், சந்தனம், குங்குமம், மஞ்சள் உட்பட 21 வகையான அபிஷேகம், சிறப்புபூஜை நடந்தது. பின்பு கொடி மரத்திற்கு அம்மன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. பால்குடம், அக்கினி சட்டி எடுக்கும் 1000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது. மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம், பூக்குழி இறங்குதல், சேத்தாண்டி வேடம் , மார்ச் 28ல் 2008 திருவிளக்கு பூஜை, மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது. பங்குனி பொங்கல் விழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிம்ம வாகன அலங்காரம் சிறப்புபூஜைகள் வீதி நடைபெறுகிறது.ஏற்பாடுகளை சத்திரிய நாடார் உறவின் முறை டிரஸ்டிகள், நிர்வாகிகள் செய்தனர். விழாவில் கமுதி அதனை சுற்றியுள்ள பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.