பதிவு செய்த நாள்
15
மார்
2024
04:03
பெரியகுளம்; பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
இக்கோயில் ஆயிரம் ஆண்டு பழமையானது ஹிந்து அறநிலையத்துறைக்கு உட்பட்டது. பாலசுப்பிரமணியர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் தனித்தனி சன்னதியில், தலா ஒரு கொடிமரம் அமைந்துள்ளது விசேஷமானது. கோயில் பங்குனி உத்திர தேர்த்திருவிழா இன்று (மார்ச் 15) கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச் 24 வரை 10 நாட்கள் திருவிழா நடக்கும். முக்கிய திருவிழாவான தேரோட்டம் மார்ச் 23 ல் நடக்கிறது. கொடியேற்றத்தின் போது ஹோமம் பூஜைகள் நடந்தது. ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்) வாகனமான ரிஷபம் கொடி ஏற்றப்பட்டது. கொடி மரத்தில் விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. புனித நீர் ஊற்றி உற்சவ மூர்த்திகளான விநாயகர், சண்டிகேஸ்வரர், ராஜேந்திர சோழீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி, வள்ளி தேவசேனோ பாலசுப்பிரமணியருக்கு தீபாராதனை நடந்தது. திருவிழா காலங்களில் ஒவ்வொரு நாளும் இரவு 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடக்கும். திருப்பணி குழுவினர்கள் ஜெயபிரதீப், சசிதரன், சிதம்பரசூரியவேலு, சிவனடியார்கள் அறக்கட்டளை தலைவர் குணசேகரன், செயல் அலுவலர் ஹரிஷ் குமார், உபயதாரர்கள் சவுந்திரபாண்டியன், திரிசங்கு, கோபிக்கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.