ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடல் திடீரென உள்வாங்கியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடல் இன்று அதிகாலை 5 மணி முதல் 100 மீ.,ல் உள்வாங்கியது. இதனால் கடற்கரையில் பாசி படர்ந்த பாறைகள் வெளியில் தெரிந்தது. மேலும் குழியில் தேங்கி கிடந்த கடல்நீரில் மீன் குஞ்சுகள், சிற்பிகள் கத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மதியம் 2 மணிக்கு பின் கடல்நீர் மட்டம் உயர்ந்ததும் அக்னி தீர்த்த கடற்கரை இயல்பு நிலைக்கு திரும்பியது. கோடை காலம் துவங்கியதால் மார்ச் முதல் மே வரை அக்னி தீர்த்த கடல் பகுதி உள்வாங்குவதும், பின் இயல்பு நிலைக்கு திரும்புவதும் சகஜம் என மீனவர்கள் தெரிவித்தனர்.