கமுதி முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா; அம்மன் வீதி உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23மார் 2024 11:03
கமுதி; கமுதி அருகே முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது. கடந்த மார்ச் 15ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் முத்துமாரியம்மனுக்கு பால்,மஞ்சள், சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம்,தீபாரதனை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காமதேனு, ரிஷபம்,குதிரை உட்பட பல்வேறு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடந்துள்ளது. நேற்று யானை வாகனத்தில் முத்துமாரியம்மன் முக்கிய வீதிகளில் நகர் வீதி உலா வந்தனர்.அப்போது பொதுமக்கள் ஏராளமானோர் வழிபட்டு சென்றனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மார்ச் 26ல் பொங்கல் விழா, மார்ச் 27ல் அக்கினி சட்டி, பால்குடம்,பூக்குழி இறங்குதல், மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது.